......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

நிந்தவூர் மையவாடி புனரைமைப்புக்காக அமைச்சர் அதாவுல்லா இருபது லட்சம் ரூபா ஒதுக்கீடு!


நிந்தவூர் மையவாடியின் புனரைமைப்புக்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா இருபது லட்சம் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளார்.
மிக நீண்ட காலமா புனரமைக்கப்படாது காணப்பட்ட இந்த மையவாடி புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அமைச்சர் அதாவுல்லாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதன பயனாகவே இந்நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மையவாடியின் புனரமைப்பு திட்டத்தின் ஆரம்ப கட்டமாக மையவாடி சுற்றுமதில் நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் முஹம்மட் தாஹிர் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE