......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 7 February 2013

ஜனாதிபதிக்கு மஹிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்த: நாம் தமிழர் கட்சியினர் கைது

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 'நாம் தமிழர் கட்சி'யின் ஆதரவாளர்கள் சிலர் தமிழ்நாடு ராமநாதபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் 65ஆவது சுதந்திரதின உரையின்போது தெரிவித்ததாகவும் அவரது அந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி பயணித்துக்கொண்டிரந்த ரயிலை மறித்து கோஷமிட்ட நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தைக் கண்டித்து தமிழக சட்டத்தரணிகளும் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். சேலம் நீதிமன்ற வளாகத்தில் கூடிய வழக்கறிஞர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE