இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்,
'தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று, இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாகவும், இது குறித்து கருத்து தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு இந்திய அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் உள்ள சிறிலங்கா அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான கோரிக்கையோ, கடிதமோ வரவில்லை.
இலங்கையில் யுத்தத்தின் போது போதும், அதற்குப் பிந்தைய காலகட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.
அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகள் அவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீட்டுவசதி, தொடருந்து, வீதிகள் புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழ் அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் உதவும். இந்த விவகாரத்தில், இந்த நடைமுறை மட்டுமே தற்போது வழக்கத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திரும்பும்படி நாம் கட்டாயப்படுத்த மாட்டோம்' என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.