......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

'பிரதம நீதியரசரின் தைரியத்திற்கு தலைவணங்குகின்றோம்'

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்க அரசியலமைப்பிற்கு முரணாக அப்பதவியிலிருந்து அகற்றப்படுகின்ற போதிலும் நாம் அவருக்கு பின்னாலே இருக்கிறோம். என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


அவருடைய தைரியம் மற்றும் துணிவிற்கு நாம் தலைவணங்குகின்றோம்.

ஜனநாயக நாட்டில் நீதித்துறை போன்ற உயர் பதவிகளை வகிக்கின்ற ஒருவர் நியாயமற்ற மற்றும் பகுத்தறிவற்ற விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.

பிரதம நீதியரசரை நீக்குவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ளார்.

இந்த நீக்கமானது நீதித்துறையின் அடித்தளத்தை பாதிக்கின்றது. சட்டம் அடிப்படை நெறிகளின் கீழே செயற்படுகின்றது.

பிரதம நீதியரசரை நீக்குவதற்கான அரசியல் உந்துதல் செயன்முறையானது. அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளது. என்றும் அந்த கூட்டமைப்பு  சுட்டிக்காட்டியுள்ளது.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE