ஒலுவில் அஷ்ரப் நகருக்குள் புகுந்த காட்டு யானை நான்கு பிள்ளைகளின் தந்தையை அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு (07) இடம்பெற்றுள்ளது.
இதல் முகம்மது காkம் இப்றாகீம் (வெள்ளையன்) வயது 53 என்பவரே மரணமடைந்தவராவார். இவரது சடலம் குடியிருக்கும் வீட்டுக்கு அருகாமையிலுள்ள முட்கம்பி வேலியில் இருந்துவாறு கண்டெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ. எல். ஹாஜா முகையதீன் தலைமையில் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒலுவில் அஷ்ரப் நகர் பகதியில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றன. இச் சம்பவத்தைத் தொடர்ந்து அஷ்ரப் நகர் மக்கள் அச்சமடைந்து இடம்பெயர்ந்து வருகின்றார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.