......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday 14 November 2012

ஐ.நா. வின் உள்ளக விசாரணை அறிக்கை வெள்ளியன்று சமர்ப்பிப்பு

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் ஐ.நா. செயற்பட்ட விதம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை செயலாளர் நாயகம் பான் கீ முனிடம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஐ.நா. பேச்சாளர் மாட்டின் நெசர்கீ நேற்று வெளியிட்டார்.


ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையில் இலங்கை படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் இறுதி தருணங்களில் ஐ.நா. செயற்பட்ட விதம் குறித்து ஆராயப்பட வேண்டுமென கோரப்பட்டிருந்தது. இதன் பிரகாரம மேற்படி விபரங்களை ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பிக்க ஐ.நா. விசாரணை மற்றும் ஒழுக்கக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியான சாள்ஸ் பெட்ரீ தலைமையிலான குழுவை பான் கீ மூன் நியமித்திருந்தார். இவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கை எதிர்வரும் வெள்ளியன்று பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளது என ஐ.நா. பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE