......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 8 November 2012

13வது திருத்தத்தை முற்றாக நீக்க மக்களை திரட்டி போராடுவோம்


13வது திருத்தச் சட்டத்தை அரசியல் யாப்பிலிருந்து அகற்றி இந்த நாட் டில் உள்ள சகல மாகாண சபைகளும் கலைக்கப்படல் வேண்டும். இச் சட் டத்தினை அகற்றுவதற்காக நாடு முழு வதிலும் உள்ள சகல கிராமங்களுக்கும் நாங்கள் சென்று சகல மக்களுக்கும் இதனை அறிவுறுத்தி பாரிய எழுச்சி கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதற்கு மக்களை ஒன்று திரட்டுவோம்.

ஜனாதிபதியும் அரசும் உடனடி யாக இச் சட்டத் தினை பாராளு மன்றத்திற்கு கொண்டுவந்து அகற்ற வேண்டும். இதற்காக எந்த வொரு வெளிநாட்டு சக்திக்கும் ஜனாதிபதி அடிபணியக் கூடாது. அல்லது இச்சட்டத்தினை அகற்றுவத ற்கு மக்களது விருப்பு வாக்குக்கு கொண்டு வருதல் வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, ஹெல உறுமய கட்சியின் அமைப்பாளர் அமைச்சருமான ரணவக்க ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
நேற்று (07) காலை 11.00 மணியளவில் பொது நூலக ஆவணக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு இவர்கள் தெரிவித்தனர். இம் மாநாட்டில் சிஹல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரளியத் தேரரும் கலந்துகொண்டார். அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்,
சிஹல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் இணைந்து இதுவே முதற்தடவையாக ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றை நடத்துகின்றது. இந்த நாட்டில் மாகாண சபை என்ற ஒரு சபை தேவையில்லை. அதனால் அரசின் பணம் வீண் விரயமாகின்றது. ஒரு நாடு ஓர் ஆட்சி என்ற ரீதியில் நாடு முழுவதிலும் ஆட்சியமைய வேண்டும். இம் மாகாண சபையினால் மக்களுக்கு ஒரு நன்மையும் கிட்டுவதில்லை. இதனால், மத்திய அரசின் நிருவாகம் குழம்பிப் போயுள்ளது.
விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. இனி இச்சட்டம் தேவையில்லை. தற்பொழுது, பாராளுமன்றத்தில் 2/3 பலம் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இருக்கும்போது உடனடியாக 13வது திருத்தத்தை அகற்ற வேண்டும்.  1987ம் ஆண்டு ஜே. ஆர்.- ராஜீவ் காந்தி இணைந்து விடுதலைப் புலிகளின் ஆயுதத்திற்கு பயந்து 5 நீதிபதிகளை பயமுறுத்தி இதனை அமுல்படுத்தினர். அன்று இதற்கு எதிராக செயற்பட்ட பிரதம நீதியரசர்களை ஜே. ஆர். நீக்கினார். அன்று இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விலகல் கடிதத்தில் கையொப்பம் வாங்கி வைத்திருந்தார்.
இச்சட்டம் நிறைவேறும்போது 150 பேருக்கும் மேற்பட்டோர்கள் சுடப்பட்டு அவர்களது சவத்தைக்கூட கையளிக்க வில்லை என அமைச்சர் விமல் தெரிவித்தார். இந்த நாட்டில் டட்லி - செல்வநாயகம் - பண்டா, செல்வா ஒப்பந்தம், அமிர்தலிங்கம் - ஜே. ஆர். ஒப்பந்தமான எத்தனையோ ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவை ஒன்றும், இந்த நாட்டில் அமுல்படுத்தப்படவில்லை. அதே போன்றுதான் இந்த ஒப்பந்தத்தையும் கிழித்தெரிய வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க;
66 ஆயிரம் பேர் இச் சட்டத்தின் பின் இறந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 29 ஆயிரம் சிங்கள மக்களும் 32 ஆயிரம் முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டனர். வடக்கில் மாகாண சபை என்ற தேர்தல் நடைபெறக்கூடாது. அண்மையில் கொண்டுவரப்பட்ட திவிநெகும சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது மியூ உயர் நீதிமன்றம் 9 மாகாண சபைகளிலும் இச்சட்டம் கொண்டு வரப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE