காதல் சோகம், மகிழ்ச்சி என எல்லாவற்றிற்கும் இதயத்தை சமபந்தப்படுத்தி சொல்லாத கவிதைகள், பாடாத பாடல்கள் இல்லை. அவ்வளவு ஸ்பெஷலான இதயத்தை எப்படி நாம் காத்திட முடியும். எந்த உணவுகள் இதயத்திற்கு ஃப்ரெண்ட்லியானவை என தெரிந்து கொள்ளவெண்டுமா? இதை தொடர்ந்து படியுங்கள்.
தர்பூசணி : தர்பூசணியில் லைகோபீன் என்ற நிறமி உள்ளது. அது இதய மற்றும் புற்று நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது என இதய மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் தர்பூசணி சிட்ருலின் என்ற பொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது ரத்த செல்களைன் பலத்தை அதிகரிக்கச் செய்யும். தர்பூசணியில் பொட்டாசியம், மெக்னீசியம் , விட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்களைக் கொண்டுள்ளது. இவை இதயத்திற்கு பலம் சேர்ப்பவை.
யோகார்ட் : நம் ஈறுகள் பலவீனமடைந்தால், இதய நோய்கள் வரும் என மருத்துவர்கள் கூருகின்றனர். யோகார்ட் ஈறுகளை பலப்படுத்தும். இது சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட், விட்டமின் மற்றும் நார்சத்துக்களை கொண்டுள்ளது. இதயத்தின் செயல்களை யோகார்ட் ஊக்குவிக்கிறது.
தக்காளி : தக்காளியில் விட்டமின் ஏ, சி மற்றும் லைகோபீன் போன்றவை உள்ளது. இவை இதயத்திற்கு பலம் தருகிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய பெற்றுள்ளது. தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி சாஸ், தக்காளி சாலட் ஆகியவை இதயத்தை பாதுகாப்பவை.
சால்மன் மீன் : சால்மன் மீனில் ஒமேகா 3 உள்ளது. கொழுப்புக்களை குறைக்கிறது. ரத்த உற்பத்தியை பெருக்கிறது. வாரம் ஒரு முறை மீன் சாப்பிடுபவர்களுக்கு 30 சதவீதம் இதய நோய் வருவது குறைவு என ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது
(மூலம்: ht)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.