நியூசிலாந்துடன் ஒக்டோபர் 30 இல் விளையாடவுள்ள போட்டியில் இந்த புதிய அணி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தலைவராக உதவி கப்டன் அன்ஜலோ மத்தியூஸ் நியமனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
'இறுதி ரி -20 போட்டியில் இலங்கை அணியினால் ஒரேயொரு சிக்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தது. சரியாக இலக்கு வைத்து பந்தை அடிக்க கூடிய இளம் இளைஞர்களை நாம் தேடிப்பிடிப்போம்' என அசந்த டி மெல் கூறினார்.
'மஹேல ஜயவர்த்தன, அன்ஜலோ மத்தியூஸ் ஆகியோரால் எல்லைக்கு அப்பால் பந்தை அனுப்புமளவுக்கு பலம் இல்லை.
எமது துடுப்பாடலுக்கு என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. முன்னர் முதல் ஆறு ஓவர்களில் குறைந்தது 50 ஓட்டங்களை எடுத்துவந்தோம். இறுதி போட்டியில் எமது அணி 30 ஓட்டங்களையே பெற்றது. இதனால் எதிரணியின் கையோங்கியது' என அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.